இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் படம் வல்லினம். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. அங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கும் பட யூனிட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது அந்த கிளைமாக்சை சென்னை தி.நகரில் உள்ள மாநகராட்சி கிரவுண்டில் கூடைபந்து மைதான ஷெட் போட்டு படமாக்கி வருகிறார்கள். இதற்கு மட்டும் இரண்டு கோடி செலவானதாம். படத்தை பற்றி இயக்குனர் அறிவழகன் கூறியதாவது: இது கூடைபந்து விளையாட்டை மையமாக கொண்ட கதை. ஹீரோ நகுல் இதற்காக 3 மாதம் தனியாக பயிற்சி எடுத்து நடித்து வருகிறார். மிருதுளா என்ற மலையாள புதுவரவு ஹீரோயின். இந்தப் படத்தின் ஹீரோ கூடைப்பந்து வீரர், வில்லன் கிரிக்கெட் வீரர். எந்த விளையாட்டு பெரியது என்பதில்தான் மோதலே தொடங்கும். உண்மையிலேய எது வீரமான விவேகமான விளையாட்டு என்கிற தீர்ப்பு படத்தில் இருக்கிறது. மற்றபடி வாழ்க்கையை விளையாட்டாக நினைக்கும் நாயகிக்கும், விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் நாயகனுக்குமான காதலை மெல்லினமாகச் சொல்கிறது இந்த வல்லினம் என்றார்.