டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் படம் வல்லினம். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. அங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கும் பட யூனிட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது அந்த கிளைமாக்சை சென்னை தி.நகரில் உள்ள மாநகராட்சி கிரவுண்டில் கூடைபந்து மைதான ஷெட் போட்டு படமாக்கி வருகிறார்கள். இதற்கு மட்டும் இரண்டு கோடி செலவானதாம். படத்தை பற்றி இயக்குனர் அறிவழகன் கூறியதாவது: இது கூடைபந்து விளையாட்டை மையமாக கொண்ட கதை. ஹீரோ நகுல் இதற்காக 3 மாதம் தனியாக பயிற்சி எடுத்து நடித்து வருகிறார். மிருதுளா என்ற மலையாள புதுவரவு ஹீரோயின். இந்தப் படத்தின் ஹீரோ கூடைப்பந்து வீரர், வில்லன் கிரிக்கெட் வீரர். எந்த விளையாட்டு பெரியது என்பதில்தான் மோதலே தொடங்கும். உண்மையிலேய எது வீரமான விவேகமான விளையாட்டு என்கிற தீர்ப்பு படத்தில் இருக்கிறது. மற்றபடி வாழ்க்கையை விளையாட்டாக நினைக்கும் நாயகிக்கும், விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் நாயகனுக்குமான காதலை மெல்லினமாகச் சொல்கிறது இந்த வல்லினம் என்றார்.