ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் நாடக கலைஞர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாக உண்டு. அதனால் அதைப்போக்க இப்போது நாடக நடிகர்கள் இணைந்து ஒரு சினிமாவை தயாரித்து வருகிறார்கள். தஞ்சை பகுதியில் உள்ள நாடக கலைஞர்கள் ஒன்றாக இணைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஸ்ரீவிஸ்கர்மா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு கம்பெனியைத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் புதுவரவு என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் நாடக உலகம் அறிந்த நடிகரான தஞ்சை சாமி நடிக்கிறார். நாயகியாக தஞ்சை ஜூனியர் புஷ்பா நடிக்கிறார். நாடக இசை அமைப்பாளர் காரை குமார் இசை அமைக்கிறார். பி.ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் பணியாற்றும் அத்தனை பேரும் நாடக கலைஞர்கள்தான். "எங்களாலும் சினிமா எடுக்க முடியும். நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இந்தப் படத்தை எடுக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ராஜேந்திரன்.