ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சினிமாவில் நாடக கலைஞர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாக உண்டு. அதனால் அதைப்போக்க இப்போது நாடக நடிகர்கள் இணைந்து ஒரு சினிமாவை தயாரித்து வருகிறார்கள். தஞ்சை பகுதியில் உள்ள நாடக கலைஞர்கள் ஒன்றாக இணைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஸ்ரீவிஸ்கர்மா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு கம்பெனியைத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் புதுவரவு என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் நாடக உலகம் அறிந்த நடிகரான தஞ்சை சாமி நடிக்கிறார். நாயகியாக தஞ்சை ஜூனியர் புஷ்பா நடிக்கிறார். நாடக இசை அமைப்பாளர் காரை குமார் இசை அமைக்கிறார். பி.ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் பணியாற்றும் அத்தனை பேரும் நாடக கலைஞர்கள்தான். "எங்களாலும் சினிமா எடுக்க முடியும். நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இந்தப் படத்தை எடுக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ராஜேந்திரன்.