'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் நாடக கலைஞர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாக உண்டு. அதனால் அதைப்போக்க இப்போது நாடக நடிகர்கள் இணைந்து ஒரு சினிமாவை தயாரித்து வருகிறார்கள். தஞ்சை பகுதியில் உள்ள நாடக கலைஞர்கள் ஒன்றாக இணைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஸ்ரீவிஸ்கர்மா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு கம்பெனியைத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் புதுவரவு என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் நாடக உலகம் அறிந்த நடிகரான தஞ்சை சாமி நடிக்கிறார். நாயகியாக தஞ்சை ஜூனியர் புஷ்பா நடிக்கிறார். நாடக இசை அமைப்பாளர் காரை குமார் இசை அமைக்கிறார். பி.ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் பணியாற்றும் அத்தனை பேரும் நாடக கலைஞர்கள்தான். "எங்களாலும் சினிமா எடுக்க முடியும். நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இந்தப் படத்தை எடுக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ராஜேந்திரன்.