டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவதற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தால் தலைநகர் டில்லியே கலவர பூமியாக மாறி இருக்கிறது. சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டில்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் இருக்கும் கமல், அதுதொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தமக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவது சரியான வழி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை என்பதே, சட்டரீதியான கொலை என்று கூறியுள்ள கமல்ஹாசன், பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது, நடந்த இடம் என்னுடைய தலைநகரம், கற்பழிக்கப்பட்டவர் எனது சகோதரி, கற்பழித்தவர்கள் எனது சகோதரர்கள். இதனால் நான் மிகவும் அவமானப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். ஏற்கனவே தன்னுடைய விரும்பாண்டி படத்தில் மரண தண்டனையை எதிர்க்கும் வகையிலான காட்சிகளை அவர் அமைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.