பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இந்த வழக்கில் ஷாருக்கானின் மானேஜர் பூஜா தத்லானியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த கடந்த புதன் கிழமை (நேற்று) ஆஜராகுமாறு போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை. தனக்கு உடல்நலம் சரியில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் பூஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. அதனால் அவரை விசாரணையில் இருந்து விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உரிய அவகாசம் வழங்கி அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பபடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.