'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து வருபவர் ரமேஷ் விநாயகம். இவர் தற்போது தன் பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழாவில் யூகி சேது, மதன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் ரமேஷ் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக நான் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். காரணம் நமது பாரம்பரிய இசைக்கு எழுத்து வடிவத்தை கண்டுபிடித்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எந்த ஒரு மொழிக்கும் எழுத்து வடிவம் இருந்தால்தான் அது உலக மக்களுக்கு போய்ச் சேரும். அதேபோல நமது பாரம்பரிய இசைக்கும் எழுத்து வடிவம் இருந்தால் அது உலகம் முழுவதும் பரவும் என்று முடிவு செய்து அதற்கான பணியை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்தேன். எனது முயற்சி பற்றியும், கண்டுபிடிப்பு பற்றியும் மியூசிக் அகடாமியில் இசை அறிஞர்கள் முன் விளக்கிக் கூறினேன். இப்போது அந்த பணிகள் முடிந்து விட்டதால் மீண்டும் இசை அமைக்க வந்து விட்டேன். எனது பணிகள் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ளவே இந்த இணைய தளத்தை தொடங்கிருக்கிறேன். இவ்வாறு ரமேஷ் விநாயகம் கூறினார்.