ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹன்சிகா மொத்வானிக்கு, இந்தாண்டு, மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமாக கழிந்திருக்கிறது. தற்போது, சிம்புவுடன், "வாலு, வேட்டை மன்னன் ஆர்யாவுடன், "சேட்டை மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். "இந்தாண்டில், உங்களின் திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது என, ஹன்சிகாவிடம் கேட்டபோது, "இந்தாண்டில், என்னை விட, யாரும் அதிக சந்தோஷமாக இருந்திருக்க முடியாது. ஆண்டு முழுவதும், படப்பிடிப்புகளில் பிசியாகவே இருந்தேன். ஒரு ஆண்டு, உருண்டோடியதே தெரியவில்லை என, பெருமூச்சு விடுகிறார்.
"என்னுடைய இந்த திருப்திகரமான திரையுலக வாழ்வுக்கு, என்னுடன் நடித்த நட்சத்திரங்கள், என்னை இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என, அனைவருக்கும் முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக, என் படங்களை பார்த்து, ரசித்த ரசிகர்களுக்கும், என் வெற்றியின் பெரும் பங்கு, சேர வேண்டும். இந்தாண்டை போலவே, அடுத்தாண்டும், எனக்கு வாய்ப்புகள் குவிய வேண்டும். இதற்காக கடவுளிடம், மனம் உருக, பிரார்த்திக்க போகிறேன் என, உணர்ச்சி வசப்படுகிறார்.