தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்குத் திரையுலகத்தில் அதிரடி கதாநாயகன் எனப் பெயரெடுத்தவர் பாலகிருஷ்ணா. படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அடிக்கடி எதையாவது அதிரடியாகப் பேசி சர்ச்சையை இழுத்து விடுவார். சமீபத்தில் கூட ஏஆர் ரகுமான் பற்றி அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பாலகிருஷ்ணா 'ஆஹா' ஓடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில்' என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
தெலுங்கு நடிகர் நானி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாழ்க்கையில் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பது எது என்பதற்கு பதிலளித்துள்ளார். அதில் தனது அப்பா என்டிஆர் படங்களும் தனது அபிமான பிராண்ட் ஆன 'சரக்கு' ஒன்றைப் பற்றியும் சொல்லி அவை போதும் எனக்கு கம்பெனி கொடுக்க என்று சொல்லியுள்ளார்.
சினிமா நடிகர்கள் தாங்கள் குடிப்பதைப் பற்றி பொதுவெளியில் பகிர மாட்டார்கள். ஆனால், பாலகிருஷ்ணா இப்படி பகிர்ந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.