பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் பிரபலமாகும் முன்பே, தமிழ் சினிமாவில்தான் முயற்சி எடுத்தார் அனுஷ்கா. ஆனால் மாதவனுடன் அவர் நடித்த ரெண்டு படம் தோல்வியடையவே, கோடம்பாக்கம் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அடுத்தபடியாக ஆந்திராவில் தனது அதிரடி கிளாமரை முன் வைத்து தெலுங்கில் முன்னணி நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். இருப்பினும் தமிழ் சினிமா மீதுதான் அவரது முழுக்கவனமும் இருந்தது. அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அவர் நடித்த அருந்ததி தமிழிலும் வெற்றி பெற்றதையடுத்து தமிழிலும் ஒரு இடத்தை கைப்பற்றி விட்டார்.
ஆனாலும் ஆந்திரவாலாக்கள் அவருக்கு அழைப்பு விடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அவர்களின் அழைப்பை கண்டுகொள்வதே இல்லை அனுஷ்கா. என்ன காரணம் என்று விசாரித்தபோது, தமிழ் சினிமாத்துறையினரை மாதிரி ஆந்திரவாலாக்கள் இல்லையாம். ரொம்ப டேஞ்சர்பேர்வழிகளாம். தமிழ் நடிகர்களை நம்பி எந்த காட்டுக்குள்ளும் நடிக்க செல்லலாம். ஆனால் அங்குள்ளவர்களை நம்பி அப்படி செல்ல முடியாது. முதலில் ஹீரோக்கள் மாதிரி நல்லவர்களாகவே பேசுபவர்கள், திடீரென்று வில்லன்களாக மாறி விடுவார்களாம். அந்த வகையில் ஆந்திரவாலாக்கள் ரொம்ப மோசம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் அனுஷ்கா.