டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் பிரபலமாகும் முன்பே, தமிழ் சினிமாவில்தான் முயற்சி எடுத்தார் அனுஷ்கா. ஆனால் மாதவனுடன் அவர் நடித்த ரெண்டு படம் தோல்வியடையவே, கோடம்பாக்கம் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அடுத்தபடியாக ஆந்திராவில் தனது அதிரடி கிளாமரை முன் வைத்து தெலுங்கில் முன்னணி நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். இருப்பினும் தமிழ் சினிமா மீதுதான் அவரது முழுக்கவனமும் இருந்தது. அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அவர் நடித்த அருந்ததி தமிழிலும் வெற்றி பெற்றதையடுத்து தமிழிலும் ஒரு இடத்தை கைப்பற்றி விட்டார்.
ஆனாலும் ஆந்திரவாலாக்கள் அவருக்கு அழைப்பு விடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அவர்களின் அழைப்பை கண்டுகொள்வதே இல்லை அனுஷ்கா. என்ன காரணம் என்று விசாரித்தபோது, தமிழ் சினிமாத்துறையினரை மாதிரி ஆந்திரவாலாக்கள் இல்லையாம். ரொம்ப டேஞ்சர்பேர்வழிகளாம். தமிழ் நடிகர்களை நம்பி எந்த காட்டுக்குள்ளும் நடிக்க செல்லலாம். ஆனால் அங்குள்ளவர்களை நம்பி அப்படி செல்ல முடியாது. முதலில் ஹீரோக்கள் மாதிரி நல்லவர்களாகவே பேசுபவர்கள், திடீரென்று வில்லன்களாக மாறி விடுவார்களாம். அந்த வகையில் ஆந்திரவாலாக்கள் ரொம்ப மோசம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் அனுஷ்கா.