மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில் பிரபலமாகும் முன்பே, தமிழ் சினிமாவில்தான் முயற்சி எடுத்தார் அனுஷ்கா. ஆனால் மாதவனுடன் அவர் நடித்த ரெண்டு படம் தோல்வியடையவே, கோடம்பாக்கம் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அடுத்தபடியாக ஆந்திராவில் தனது அதிரடி கிளாமரை முன் வைத்து தெலுங்கில் முன்னணி நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். இருப்பினும் தமிழ் சினிமா மீதுதான் அவரது முழுக்கவனமும் இருந்தது. அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அவர் நடித்த அருந்ததி தமிழிலும் வெற்றி பெற்றதையடுத்து தமிழிலும் ஒரு இடத்தை கைப்பற்றி விட்டார்.
ஆனாலும் ஆந்திரவாலாக்கள் அவருக்கு அழைப்பு விடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அவர்களின் அழைப்பை கண்டுகொள்வதே இல்லை அனுஷ்கா. என்ன காரணம் என்று விசாரித்தபோது, தமிழ் சினிமாத்துறையினரை மாதிரி ஆந்திரவாலாக்கள் இல்லையாம். ரொம்ப டேஞ்சர்பேர்வழிகளாம். தமிழ் நடிகர்களை நம்பி எந்த காட்டுக்குள்ளும் நடிக்க செல்லலாம். ஆனால் அங்குள்ளவர்களை நம்பி அப்படி செல்ல முடியாது. முதலில் ஹீரோக்கள் மாதிரி நல்லவர்களாகவே பேசுபவர்கள், திடீரென்று வில்லன்களாக மாறி விடுவார்களாம். அந்த வகையில் ஆந்திரவாலாக்கள் ரொம்ப மோசம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் அனுஷ்கா.