இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நான் கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும்; இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன், ஆனால் நடிகராகிவிட்டேன் என்று நடிகர் விஷ்ணு கூறியுள்ளார். வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. சமீபத்தில் வெளியான நிர்ப்பறவை படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு உண்மையில் கிரிக்கெட் மீதுதான் உயிர். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுதான் அதிகம். ஏனோ சரியாக அமையவில்லை. அதன் பின்தான் சினிமாவுக்கு வந்தேன். வீட்டில் பெரிய கஷ்டம் இல்லை. கேட்டதெல்லாம் கொடுக்கிற வீடுதான். ஆனாலும் சினிமாவில் மட்டும் இடம் கிடைக்கவில்லை. தொடர் முயற்சிகள், சினிமா சம்பந்தமான ஆள்களுடன் சந்திப்புகள் என நாள்கள் கடந்து கொண்டே இருந்தது. சினிமா அவ்வளவு பெரிய விஷயமாக இருந்தன.
அதனாலேயே நிச்சயம் இதில்தான் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். அப்போதுதான் இயக்குநர் சுசீந்திரன் சார் அழைத்து வெண்ணிலா கபடி குழு வாய்ப்பு தந்தார். நல்ல படம், எனக்கான நல்ல அடையாளத்தை உருவாக்கி தந்தது. கதைதான் ஹீரோ என்பதை நம்புகிற அளவுக்கு படம் பார்த்தவன் நான். சினிமாவுக்கு வந்த பின்பும் அதுதான் நிஜ சினிமாவாக இருக்கும் என எண்ணினேன். சினிமாவுக்கு வந்த வேகத்தில் இந்நேரம் 15 படங்களை கடந்திருக்கலாம். அது தேவை இல்லை. நான் பெரிய அழகன் இல்லை. மற்ற ஹீரோக்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு நான் பலசாலியும் இல்லை. எனக்கான இடம் ஒன்று இருக்கும். அதற்கு போராடிக்கொண்டு இருக்கிற சின்ன பையன் நான், என்று கூறியுள்ளார்.