கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தூத்துக்குடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடியவர்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை வழங்குங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு டைரக்டர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டில்லியில் கடந்த 16ம்தேதி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சி நம் நெஞ்சை விட்டு மறைவதற்குள், தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிகக் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இக்கொடிய செயலைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவி சம்பவத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் டில்லி அரசுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டியாக இருந்து இந்தியாவுக்கே உதாரணமாக திகழவேண்டும், என்று கூறியுள்ளார்.