பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
திருமதி தமிழ் என்ற படம் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நடிகை தேவயானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்து வரும் படம் திருமதி தமிழ். இந்த படத்தை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் இயக்கி, நடிக்கிறார். தங்களது சொந்த தயாரிப்பில் உருவாக்கி வரும் திருமதி தமிழ் படம் குறித்து தேவயானி அளித்துள்ள பேட்டியில், திருமதி தமிழ் படம் விரைவில் வெளிவர உள்ளது. இது நான் நடிக்கும் 75வது படம் ஆகும். இந்த படத்தை என்னுடைய கணவர் ராஜகுமாரன் இயக்கி நடிக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைக்கிறார். இது தவிர ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.நல்ல கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமதி தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்த படம் எனக்கு திருப்பு முனையாக அமையும், என்று கூறியுள்ளார்.
படத்தின் இயக்குனரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் கூறுகையில், திருமதி தமிழ் நான் இயக்கும் 4வது படம் ஆகும். இதற்கு முன் நான் இயக்கிய நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் ஆகிய வெற்றி படங்களை இயக்கி உள்ளேன். இந்த வரிசையில் திருமதி தமிழ் சினிமா வெற்றிபடமாக அமையும். சட்ட பிரச்னையை மையமாக இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் வாழ்க்கையில் பயன்படும் சட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த படத்தின் கரு அமைந்து உள்ளது. ஆக்ஷன் நிறைந்த படம் ஆகும். கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்து உள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இந்த படம் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. இருந்தாலும் பொங்கலுக்கு பிறகு படத்தை வெளியிட முடிவு செய்து உள்ளோம், என்றார்.