விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிட்டு வருகிறேன், என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய தமன்னா அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இதுவரை என்ன சாதித்தேன் எத்தனை பேருக்கு உதவியாக இருந்தேன் என்றெல்லாம் திரும்பி பார்ப்பேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிடுகிறேன். ஆதரவற்றோருக்கு உதவுகிறேன். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பர். எனவே நான் செய்யும் உதவிகளை விளம்பரபடுத்த விரும்பவில்லை.
2005ல் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். யாரும் கையை பிடித்து அழைத்து செல்லமாட்டார்கள். நாமாகத்தான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும். படப்பிடிப்புக்காக நிறைய நாடுகளை சுற்றி வந்து விட்டேன். அதில் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடித்தது. அங்கு ஷாப்பிங் போவது மகிழ்ச்சியாக இருக்கும். சீனாவுக்கு படப்பிடிப்புக்கு சென்ற போதுதான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், என்றார்.