நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நான் அதிர்ஷ்டத்தால் நடிகையானேன்; தோல்வி பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன், என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார். ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். சினிமாத்துறை அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா மேல் எனக்கு சிறுவயதில் இருந்தே மோகம். படம் என்றாலே பைத்தியம் ஆகிவிடுவேன். ஒரு படம் விடாமல் பார்ப்பேன். இப்போது நடிகையாகி விட்டேன். இதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.
இப்போது தெலுங்கில் இருபடங்கள் கைவசம் உள்ளன. தமிழில் முனி-3 படத்தில் நடிக்கிறேன். இந்த ஆண்டு சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டேன். படங்கள் தோல்வி பற்றி கவலைப்பட மாட்டேன். ஹிட் படங்கள் கொடுக்காவிட்டாலும் படவாய்ப்புகள் வருகின்றன. எத்தனையோ திறமைசாலிகள் படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் வெளியே இருக்கின்றனர். இந்த துறைக்கு வந்ததே போதும். எனக்கு தைரியம் அதிகம். பிரச்சினைகளை பார்த்து துவண்டுவிட மாட்டேன். தைரியமாக எதிர்கொள்வேன். அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைமைக்கு உயர்ந்து இருக்கிறேன். எதற்கும் பயம் இல்லை, என்று கூறியுள்ளார்.