தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கையுறை ஒருகோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பாப் இசை உலகின் சக்கரவர்த்தி என்று அவருடைய ரசிகர்களால் புகழப்படுபவர் மைக்கேல் ஜாக்சன். தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகம் முழுவதும் பலகோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்னும் மங்காமல் ஒளிவீசுகிறது. அவருடைய பொருட்களை பொக்கிஷமாக கருதும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இசை நிகழ்ச்சியின்போது மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. அவற்றை அதிக விலை கொடுத்து அவரது ரசிகர்கள் வாங்கி செல்கின்றனர். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மைக்கேல் ஜாக்சனின் கையுறை ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அது ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. இந்த தகவலை ஏல மையத்தின் உரிமையாளர் நேட்டி சாண்டர்ஸ் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த ஏலத்தில் பிரபல பாப் இசைப்பாடகி காகா, மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலத்தில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.