தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் இந்திய திரையுலகம் மீளவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த விஷால், புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர் படிக்க வைத்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை இனிமேல் தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
அதையடுத்து தமிழ் சினிமாவைச்சேர்ந்த இன்னொரு நடிகரான சிவகார்த்திகேயனும் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்டுடியோவிற்கு சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் மரணத்தை நம்பவே முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருடன் பேசினேன். பெங்களூர் வருபோது சந்திக்குமாறு சொன்னார். ஆனால் நான் இப்போது பெங்களூர் வந்திருக்கிறேன். ஆனால் அவர் இல்லை. அவர் ஒரு திரையிலும், திரைக்கு பின்னாடியும் ஒரு மிகச்சிறந்த நடிகராக மனிதராக வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த ஆன்மா. அவருக்கு மறைவே கிடயாது.
திரையில் மட்டுமின்றி திரைக்கு பின்னரும் அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மறைவின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதோடு புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.