பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஈயின் காதலியான பொன்வசந்த நடிகை தமிழில் அறிமுமாகி சின்னப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் தமிழ்நாடு முழுவதும் கிளைகள் வைத்திருக்கும் ஒரு கடை அதிபரின் மகன். அவரும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். பொன் வசந்தம் தற்போது தெலுங்கு பக்கம்போய் அங்கு நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார். தமிழுக்கு இப்போது திரும்ப வந்திருக்கிறார். இந்த நிலையில் தனது பழைய நட்பை புதுப்பிக்க விரும்பினார் அந்த கடை அதிபர் மகன். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை துரத்தினாராம். விடாது போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியாக ஐதராபாத்துக்கு ஃபிளைட் ஏறும் முன் பொன்வசந்தம். அவருக்கு அனுப்பிய ஒரு எஸ்.எம்.எஸ்.சில் கடை அதிபர் மகன் அப்செட். "நீ பிசினஸ் மேன். நான் பிசி ஆர்ட்டிஸ்ட். நான் ரொம்ப தூரம் வந்துட்டேன். இனிமே தொந்தரவு பண்ணினால் நான் வேறு மாதிரி டீல் பண்ணுவேன்" என்பதுதான் அந்த எஸ்.எம்.எஸ்.