ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பரத், நிலா ஜோடியாக நடிக்க ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் கில்லாடி. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம். படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகருக்கு பொருளாதார நெருக்கடி -ஏற்பட்டதால் படம் பாதியிலேயே நின்று விட்டது. தற்போது மீண்டும் அந்தப் படத்தை தூசி தட்டி எடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். நடிகர் நடிகைகளுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை எல்லா நடிகர்களும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் 50 சதவிகித சம்பளம் போதும் என்ற சொல்லிவிட்டாராம். தற்போது தயாரிப்பாளர் ஒரு தொகையை கடனாக பெற்று படத்தின் டப்பிங் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகிறார். "எல்லாவற்றுக்கும் நேரம் அமையணும் என்று சொல்வார்கள். கில்லாடிக்கு இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. இது ஆக்ஷன் நிறைந்த காதல் கதை. பல கஷ்டங்களை தாண்டி இப்போது இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறது. ஜனவரியில் வெளியிட தீவிரமாக வேலை செய்து வருகிறோம்" என்றார் இயக்குனர் ஏ.வெங்டேஷ்.