வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஒவ்வொரு வருடமும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு என்னை அழைக்க வேண்டும், விழா நடைபெறும் அரங்கை பெருக்கி, துடைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் நெகிழ்ச்சி பட பேசினார். சென்னையில் 10வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவின் நிறைவு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். விழாவில் வணக்கம் என்று தமிழில் பேச ஆரம்பித்தார் அமிதாப். வணக்கம், ரொம்ப நன்றி. என்னை இந்த விழாவுக்கு அழைத்தற்காக மனமார்ந்த நன்றி. எனக்கு அவ்வளவு தான் தமிழ் தெரியும் என்று சொல்லிவிட்டு, பிறகு ஆங்கிலத்தில் பேச தொடங்கினார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா பற்றி நடிகை சுஹாசினி என்னிடம் கூறினார். பெண்கள் முன்நின்று இந்த விழாவை நடத்தியது பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமா கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை இந்தியாவில் வேறு எந்த சினிமா கலைஞர்களிடமும் கிடையாது. மும்பை கலைஞர்களிடம் இல்லாத உழைப்பு, ஒழுக்கம், நேரம் தவறாமை உள்ளிட்டவைகள் தமிழ் சினிமாவில் இருக்கிறது. சினிமா மட்டுமே ஜாதி, மதம், இனம், மொழி என்று பாராமல் எல்லோரையும் ஒற்றுமையாக வைத்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் நான் வேலை செய்து இருக்கிறேன். நாங்கள், உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
இனி ஒவ்வொரு வருடமும் சுஹாசினி என்னை இந்த விழாவுக்கு அழைக்க வேண்டும். விழா நடைபெறும் அரங்கை பெருக்கி, துடைக்கவும், இருக்கைகளை மேடையில் கொண்டு வைத்து போடவும் நான் தயாராக இருக்கிறேன். வேண்டுமானால் விருந்தினர்களை கூட நான் வரவேற்க தயாராக இருக்கிறேன். உலகிலேயே, இந்தியாவில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. இங்கே இருப்பவர்கள் மிகவும் திறமைசாலிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.11 லட்சம் நன்கொடையாக வழங்கினார் அமிதாப்.