இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
காதல் சந்தியாவை நினைவிருக்கிறதா? முதல் படத்திலேய வெள்ளி விழா நாயகியானவர். அடுத்தடுத்து படங்களில் நடித்தார். தீடீரென்று சொந்த தேசமான கேரளாவுக்குச் சென்று விட்டார். போன வேகத்தில் அங்கு மம்முட்டி, மோகன்லால், சுரேசுடன் ஒரு ரவுண்டு கட்டினார். இப்போது அங்கேயும் ஓய்ந்து விட்டார். பேய் படங்கள், டிராகுலா படங்கள் என்று நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் பிசியாக இருந்தாலும் தமிழின் மீது ஒரு கண் வைத்திருந்தார். முன்பு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டவர் இப்போது இறங்கி வந்திருக்கிறார். அதன் பலனாக ஒரு படம் கிடைத்திருக்கிறது. ஜே.ஆர்.கண்ணன் என்பவர் தயாரித்து நடிக்கும் மாயை என்ற படத்தில் நடிக்கிறார். சஞ்சய்-சனம் என்ற இன்னொரு ஜோடியும் இருக்கிறது. பொதுவாக படங்களில் நண்பர்கள் காதலை சேர்த்து வைப்பார்கள். இந்தப் படத்தில் காதலை பிரிப்பதுதான் நண்பர்களின் வேலை. எல்லாவற்றுக்கும் உதவும் நண்பர்கள் காதல் என்று வந்து விட்டால் துரோகம்தான் செய்வார்கள் என்ற கதையுள்ள படம். லட்சுமிராம் என்பவர் இயக்குகிறார்.