உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! | 32ஆண்டுகளுக்கு பின்மோகன்லால் - பூர்ணிமா | ரகுமானின் குரல்தனுசுக்கு "செட் ஆகலை | விரைவில்..."அங்குர் அரோரா மர்டர் கேஸ் | "என்னை யாருக்குமேஅடையாளம் தெரியலை | அரசியல் தலைவராகிறார் ஸ்ரேயா:விருதுக்கு குறி வைக்கிறார் | நஸ்ரியாவுக்கு நல்ல நேரம் | வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! |
நீதானே என் பொன்வசந்தம் மக்களுக்கு பிடிக்காமல் போனதால் இப்போது கும்கி காட்டில் மழை. திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூலை அள்ளுகிறது. வசூல் இதுவரை 20 கோடியை தாண்டிவிட்டதாக திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பே சொல்கிறது. 21ம் தேதி தெலுங்கில் வெளியான கும்கி, அங்கேயும் வெற்றிக் கணக்கை துவக்கி இருக்கிறது.
இந்த வெற்றியை கும்கி டீம் ஒரு நட்சத்திர ஓட்டலில் கும்மாளமடித்து கொண்டாடியது. விடிய விடிய நடந்த ஆட்டம் பாட்டத்தில் விக்ரம் பிரபு குடும்பத்தினர், லட்சுமி மேனன் குடும்பத்தினர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். கும்கி படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் தலா 2 சவரனில் தங்க சங்கிலி பரிசளித்து ஷாக் கொடுத்தார் தயாரிப்பாளர் லிங்குசாமி. "படத்தின் இந்தி உரிமையை பெரும் தொகைக்கு கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் லிங்குசாமி கொடுக்கவில்லை. இதே படத்தை இந்தியில் இதைவிட பிரமாண்டமாக தயாரிக்கப்போவதாகவும், பிரபு சாலமனே இயக்குவார்" எனவும் லிங்குசாமி அறிவித்தார்.
பார்ட்டிக்கு மாணிக்கத்தை கூப்பிடலையா லிங்குஜி...!!