ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு காலத்தில் மம்முட்டி, மோகன்லால் கலெக்ஷன் ஏரியாவையே ஆட்டம் காண வைத்தவர் ஷகிலா. மூன்று காட்சிகளில் ஈ ஓட்டினாலும் காலை காட்சியில் தியேட்டரில் களைகட்ட வைத்தவர். ஷகிலா நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று மலையாள சூப்பர் ஸ்டார்களை அலற வைத்தவர். பின்னர் கேரளாவிலிருந்து திட்டமிட்டு துரத்தப்பட்ட ஷகிலா. தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தார். வயசாகி விட்டதால் கவர்ச்சி படங்களை கைவிட்டார். தன்னை விலைமாதுவாகவும், கவர்ச்சி பாம் ஆகவும் சித்தரிக்கும் படங்களில் தானே நடித்தார். காமெடிக்காக அந்தக் காட்சிகள் என்று சொல்லப்பட்டாலும் அந்த காட்சிகளில் நடித்து விட்டு வந்து வீட்டில் விடிய விடிய அழுது கொண்டிருப்பாராம் ஷகி. அவருக்கு ஆறுதலாக வந்த ஒரு அரசியல்வாதியும் திருமண ஆசை காட்டி ஏமாற்றி ஓடிவிட்டார். இதனால் மனக் கஷ்டத்திலும், பணக் கஷ்டத்திலும் இருக்கும் ஷகி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை அணுகி தனக்கு ஏதாவது ஒரு கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டு வருகிறார். கவர்ச்சி, காமெடி என்கிற பெயரில் கிண்டல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்போது குணசித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒன்பதுல குரு என்ற படத்திலும், இன்னாருக்கு இன்னார் என்ற படத்திலும் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். ஆடையை குறைத்த ஷகிலா இனி எல்லோரையும் அழவைக்கப்போகிறார்.