பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில், மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களின் மார்க்கெட் முன்பை விட இப்போது மந்தமாகி விட்டது. அதனால் ப்ருதிவிராஜ் அங்கு முக்கியமான நடிகராகி விட்டார். அதனால்தான் அவர் நடித்த உருமி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார் ஆர்யா. அது நட்புக்காக என்றாலும், மீண்டும் தான் மலையாளத்தில் நடித்து வரும மும்பை போலீஸ் என்ற படத்திலும் ஆர்யாவை ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க அழைத்தாராம் ப்ருதிவிராஜ். ஆனால் முதலில் அதற்கு ஓ.கே சொன்ன அவர், தற்போது சிறிய கேரக்டரில் நடித்தால் என் ஹீரோ இமேஜ் போய் விடும் என்று வாங்கிய அட்வான்சை திருப்பிக்கொடுத்து விட்டார்.
இதனால் ப்ருதிவிராஜ்க்கு ஆர்யா மீது பயங்கர கோபமாம். முதலில் ஓ.கே சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் இப்படி காலை வாருவதுதான் நல்ல நடிகருக்கு அழகா? என்று சினிமா பாணியில் டயலாக் பேசியிருக்கிறார். அதற்கு, நட்பு வேறு, தொழில் வேறு. ப்ருதிவிராஜின் நட்பு எனக்கு வேண்டும். ஆனால் அவர் படத்தில் துக்கடா கேரக்டர் வேண்டவே வேண்டாம். இப்படி நான் தொடர்ந்து நடித்தால் தமிழிலும் இதுமாதிரி நட்பு என்ற பெயரில் துக்கடா வேடங்களில் நடிக்க அழைப்பார்கள். இதனால் என் சினிமா கேரியரே பாழாகி விடும் என்று பக்குவமாக பேசி விட்டு எஸ்கேப்பாகி விட்டாராம். இதனால் ஆர்யா நடிக்கயிருந்த வேடத்துக்கு ஜெயசூர்யா என்ற நடிகரை தற்போது கமிட் பண்ணியிருக்கிறாராம் ப்ருதிவிராஜ்.