இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கோகுலத்தில் சீதை' தொடர் சேனல் அளவில் நம்பர் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
டான்ஸ் மாஸ்டர் நந்தா, ஆஷா கெளடா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் தொடர் 'கோகுலத்தில் சீதை'. 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. என்ன தான் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் இதுநாள் வரையில் ஜி தமிழின் மற்ற சீரியல்களான செம்பருத்தி, சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ஆகிய தொடர்கள் மட்டுமே அதிகமாக பிரபலமாகியும், டி.ஆர்.பி.,யிலும் முன்னணி இடங்களை பிடித்து வந்தன.
இந்நிலையில் தற்போது மற்ற ஜி தமிழ் சீரியல்களை ஓவர்டேக் செய்து 'கோகுலத்தில் சீதை' தொடர் சேனல் அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. தற்போது பரப்பாகி சென்று கொண்டிருக்கும் ‛மெகா திருமண வைபவம்' என்ற ஜி தமிழின் புதிய யுக்தியில் பல சீரியல்களில் குறிப்பிடும் படியாக சில திருமணங்கள் ஸ்பெஷல் எபிசோடுகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோகுலத்தில் சீதை இதற்கு முன் எடுத்த டிஆர்பியை விட அதிகமாக எடுத்து ஜி தமிழின் நம்பர் 1 தொடராக தேர்வாகியுள்ளது.
இதனை சீரியலின் தயாரிப்பு நிறுவனம் தங்கள் இண்ஸ்டாகிராமில் பெருமையுடன் பகிர்ந்து சீரியலில் நடித்து வரும் நடிகர்களுக்கும் டெக்னீசியன் குழுவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த தொடரின் ரசிகர்கள் விரைவிலேயே தமிழில் ஒளிபரப்பாகும் ஒட்டுமொத்த சீரியல் டிஆர்பியிலும் நம்பர் 1 ஆக இடம்பிடிக்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.