ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை முதல் ரவுண்டில் நடத்தி வந்த சூர்யா, இரண்டாவது ரவுண்டில் அதிலிருந்து விலகி விட்டார். இப்போது அவர் இடத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் நடத்துகிறார். ஆனால் சூர்யா அதிலிருந்து விலகியதற்கு காரணம், மாற்றான் படத்தின் தோல்விதான் என்கிறார்கள். இந்த தோல்வியை இனி தொடரவிடக்கூடாது என்பதற்காக, சிங்கம்-2 வை சூப்பர் ஹிட்டாக கொடுக்கும் வரை எனக்குநிம்மதி இல்லை என்று முழுவீச்சில் நடித்து வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் இதுகுறித்து சூர்யாவைக்கேட்டால், டி.வியில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அதற்காகத்தான் சினிமாவில் பிசியாக இருந்தபோதும் ஒப்புக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நேயர்களை சந்திதது அந்த போட்டியை நடத்தியது இனிமையான அனுபவமாகவே இருந்தது. ஆனால் டி.வி நிகழ்ச்சியைவிட சினிமா ரொம்ப முக்கியம் என்பதால்தான், அதிக நாட்களை என்னால் டி.வி நிகழ்சசிக்கு செலவிட முடியவில்லை. அதனால் விலகிவிட்டேன் என்று சொல்லும் சூர்யா, வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வந்த நான், சின்னத்திரை மூலம் தினம்தினம் அவர்கள் முன் தோன்றுவதால் எனக்கான மவுசு குறைந்து விடும் என்றும் மனதிற்கு பட்டது. அதனால்தான் முழுவதுமாக அந்த நிகழ்ச்சியை தவிர்த்து விட்டேன் என்றும் சொல்கிறார்.