ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'அண்ணாத்த, சாணி காயிதம்,' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'குட்லக் சகி' நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் தற்போது மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு நானி ஜோடியாக 'தசரா' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ரஜினிகாந்த், மகேஷ் பாபு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் கீர்த்தி சம்பளத்தை உயர்த்திவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர் கேட்கும் சம்பளம் இதை விட அதிகம், ஆனாலும், 3 கோடிக்கே அவர் நடிக்க சம்மதம் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
நடிகைகளில் நயன்தாரா அதிகபட்சமாக 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மற்ற நடிகைகளின் சம்பளம் நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட குறைவுதான் என்பது கூடுதல் தகவல்.