'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கும். தாஜ் மஹாலின் அருகில் படப்பிடிப்பு நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. தாஜ்மஹாலின் பின்னணி தெரியும் வகையில் ஒரு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுவது உண்டு. சமீபகாலமா தாஜ்மஹாலின் குறைந்து வரும் அழகினை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. படப்பிடிப்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் தமிழ் நாட்டிலிருந்து படம் எடுக்கச் செல்பவர்களுக்குத்தான். என்கிறார்கள். இந்த அனுபவம் சுவாசமே என்ற படத்தின் படப்பிடிப்பை நடத்தச் சென்றவர்களுக்கு கிடைத்திருக்கிறது. சத்யா, பிரதீஷா நடிக்கும் இந்தப் படத்தை எஸ்.வினோத் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
காதல் சினிமாக்கள் நிறைய வந்து விட்டது. இது புதுமையான காதலை சொல்லும் படம். படத்தில் தாஜ்மஹாலுக்கு காதலுனும், காதலியும் வருவது மாதிரியான காட்சி இருக்கிறது. இதற்காக தாஜ்மஹால் சென்றோம். முறையான அனுமதி பெற்றிருந்தும், தினமும் சோதனை என்ற பெயரில் 2 மணி நேரம் காக்க வைத்தனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சமையல் செய்து சாப்பிடுவதுதான் வழக்கம். அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் வெளியில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிட வேண்டியதாகிவிட்டது. பாதுகாப்பு என்ற பெயரில் அவ்வப்போது அதிகாரிகள் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தனர். அவர்களை தக்கபடி கவனித்து அனுப்ப வேண்டியது இருக்கிறது. இப்படியாக 5 நாட்களில் நடத்தி முடிக்க இருந்த படப்பிடிப்பை பத்து நாட்கள் வரை ஆக்கிவிட்டனர். இதனால் தயாரிப்பாளருக்கு இரு மடங்கு செலவு. எங்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தின் அருகே ஒரு பெங்காலி படப்பிடிப்பு நடந்தது அதற்கு அவர்கள் எந்த இடையூறும் செய்யவில்லை. என்றார்.