தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கியூபா - அமெரிக்க நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஸ்பானிஷ் மொழிப்படம் "உனா நேஷே". படத்தை இயக்கி இருப்பவர் நியூயார்க்கை சேர்ந்த பெண் இயக்குனர் லூஸி முல்லாய். ட்ரிபெக்கா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருது பெற்றவர். நியூயார்க்கில் திரைப்பட கலையை கற்று, கியூபாவிற்கு சென்று உனா நேஷே படத்திற்காக ஆராய்ச்சி செய்தவர். லூஸியின் முதல் முழுநீள திரைப்படம் இது தான். கோவா 2012ம் ஆண்டு திரைப்பட விழாவில், நடுவர் குழுவின் விசேஷ விருதும், வெள்ளி மயில் ப்ளஸ் 15 லட்சம் ரூபாய் பரிசு பெற்ற படம் இது.
ரெளல், எலியோ இருவரும் கியூபா நாட்டில் ஹவானா நகரில் வாழும் டீன்-ஏஜ் நண்பர்கள், பணக்காரர்கள் டூரிஸ்ட்டுகள் வந்து தங்கும் நட்சத்திர ஓட்டலின் சமையல் அறையில் பணிபுரிவர்கள். எத்தனை நாளைக்கு நாள் தான் ஏழ்மையாக வாழ்வது என்று கருதி, அமெரிக்கா சென்று சுதந்திரமாக பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் எனபது இவர்களுடைய நெடுநாள் திட்டம். ஒரு வெளிநாட்டவரிடமிருந்து ரெளல் பணம் திருடும்போது போலீஸ் துரத்துகிறது. ஊரைவிட்டு ஓடுவது தான் ஒரேவழி என்று ரெளல் முடிவு செய்கிறான். இரட்டையரான தன் சகோதரி லைலாவை விட்டுவிட்டு ரெளல் உடன் சென்றுவிடலாம் என்று எலியோ முடிவு செய்கிறான். அவர்கள் இருவரும் வெளநாட்டுக்கு தப்பித்து சென்றுவிட ஏற்பாடு செய்வதை அறிந்த லைலாவும் அவர்களுடன் போக விரும்புகிறாள். முதலில் மறுத்தாலும் எலியோ பின்னர் ஒப்புக் கொள்கிறான்.
படகை செலுத்த தேவைப்படும் மோட்டார் என்ஜினை வாங்கி, படகில் பொருத்தி கிளம்புகிறார்கள். கடலில் எண்பது மைல் பயணம் செய்தால் அமெரிக்காவின் மியாமி நகரை கடலில் அடைந்துவிடலாம் என்று அவர்களது எண்ணம். கொஞ்சதூரம் சென்றதுமே மோட்டார் என்ஜின் வேலை செய்யவில்லை. எலியாவும், ரெளலும் துடுப்பு வலித்து படகை செலுத்துகின்றார்கள். லைலா, ரெளலிடம் அதிக ஈடுபாடு காட்டுவதை எலியோ உணர்கிறான். எதிர்பாராவிதமாக பெரிய திமிங்கலம் அவர்களது படகை தாக்குவதில் படகு நீரில் மூழ்க தொடங்குகிறது. இதில் ரெளல் பலியாகிறான். எலியாவும், லைலாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். எப்படியோ சமாளித்து, அமெரிக்க இளைஞர்கள் நால்வர் உதவியோடு மியாமி கடற்கரையை வந்து அடைகிறார்கள். இனி வாழ்க்கையில் என்றும் வசந்தம் என்று நினைக்கும்போது, சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்குள் வந்ததற்காக எலியா, லைலா இருவரையும் அமெரிக்க போலீஸ் கைது செய்து அழைத்து செல்கிறது.
வீடுகள், கட்டிடங்கள் மேல் ஓடும் ரெளல், அவரை துரத்தும் போலீஸ், ஏழ்மையான வாழ்க்கையில் சட்டத்தை மீறும் சாதரண மக்களின் செயல்கள், சவால்கள் மிக்க கடல் பயணம் போன்ற காட்சிகளில் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. அமெரிக்காவை சொக்க பூமியாக பார்க்கும் இளைஞர்களின் நிலைமை யதார்த்தமாக காண்பிக்கப்படுகிறது. நடுவர் குழுவின் விசேஷ விருது - வெள்ளி மயில் ப்ளஸ் 15 லட்சம் ரூபாய் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-