'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பவர் அருண் விஜய். தன்னுடைய படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை ட்விட்டர் பக்கம் மூலமாகத்தான் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அருண் விஜய், ட்விட்டர் பக்கத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதுவென்றால் அருண் விஜய், டுவிட்டர் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.