1 ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டுக்கோ, அழகான லொகேஷன்களுக்கு சென்று நாட்கணக்கில் தங்க வேண்டிய அவசியலம் இல்லை அவருக்கு. தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக்கொண்டது வெறும் அரைமணி நேரம் தான்.
2 இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல்.
3 ரஜினி, கமல், சிவ குமார், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோரின் படங்களில் 50 படங்களுக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார்.
4 உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம், ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு பாடமாக்கப்பட்ட சவுண்ட் ட்ராக்கை நீக்கிவிட்டு, உதட்டசைவு, உடலசைவு காட்சித் தேவைக்கு பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின்
5 முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குநரோ, மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள் என்றெல்லாம் சொல்லி, பின் இசைச்சேர்ப்பு முடிந்து அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறுமாதிரி
6 ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி. சிம்பொனி கம்போஸ் பண்ண குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
7 விசிலில் டியூன் அமைத்து அதை ஒலி நாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் காதலின் தீபம் ஒன்று.
8 படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம் கரகாட்டக்காரன்
9 வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மவுனத்தால் செழுமைப்படுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். இரண்டு பேர் மவுனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட அவர்களின் மன உணர்வுகளை, புரியாதவர்களுக்
10 ரீரிகார்டிங் செய்யும்போது, மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும் போது,நோட்ஸ் எழுத ஆரம்பித்து விடுவார். அந்த அளவுக்கு எந்த இசையமைப்பாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
11 இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் பிள்ளை நிலா
12 பருவமே,புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர்.
13 இளையராஜா, அரை நாளில் மொத்த ரீ-ரெக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் நூறாவது நாள்.
14 இந்தியாவில் முதல்முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வாங்கியவர். படம் (பழசிராஜா)
15 அவர், முதன் முதலாக ஸ்டீரியோ முறையில் பாடல்களை பதிவு செய்த படம் ப்ரியா
16 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடல்.
17 இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதி வெற்றி கண்ட படங்கள் வைதேகி காத்திருந்தாள்,அரண்மனைக்கிளி.
18 இந்தியாவில் கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா (புன்னகை மன்னன்)