பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ்நாட்டில் விஜய் சேதுபதி போன்று மலையாளத்தில் பிருத்விராஜ் கையில் நிறைய படங்கள் இருக்கிறது. அவற்றில் பல முழுவதுமாக பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருப்பவை. தியேட்டர் திறப்புக்காக அவரது படங்கள் காத்திருந்தாலும் அவர் நடித்து முடித்த கோல்ட் கேஸ் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர்.
இந்த படத்தில் சத்யாஜித் எனும் போலீஸ் அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார். அருவி படத்தின் மூலம் புகழ்பெற்ற அதிதி பாலன் இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கர்ணன் படத்தில் தனுஷுக்கு அக்காவாக நடித்த லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி, சுசித்ரா பிள்ளை, ஆத்மியா ராஜன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நடக்கும் கொலையை பிருத்விராஜ் துப்பறிந்து கண்டுபிடிப்பதே படத்தின் கதை. த்ரிஷ்யம் படத்தின் பாணியிலான படம். படத்தை அமேசான் பிரைம் வாங்கி உள்ளது. வருகிற 30ம் தேதி வெளியாகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியாகும் முதல் பிருத்விராஜ் படம் இது. இதற்கு முன்பு மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.