பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக நம்பர் ஒன் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. தெலுங்கில் மட்டுமே நடித்து வந்த இவர் கடந்த வருடம் முதன்முறையாக 'ஸ்பைடர்' என்கிற தெலுங்கு - தமிழ் என இரு மொழியில் நடித்தார். வரும் 2019ம் ஆண்டு, ஹிந்தியில் ஒரு படத்தில் மகேஷ்பாபு நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது
இதுப்பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மகேஷ்பாபு பேசும்போது, தான் ஹிந்தியில் நடிக்கப்போவதில்லை என உறுதியாக கூறியுள்ளார் தெலுங்கிலேயே தொடர்ந்து படங்களில் மகிழ்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும்போது எதற்காக பாலிவுட்டுக்கு போய் நேரத்தை வீணாக வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மகேஷ்பாபு, இந்த விஷயத்தில் விஜய் எப்படி தமிழில் மட்டும் நடித்து வருகிறாரோ, அதேபோல தெலுங்கு படங்களில் மட்டும் நடிப்பதையே விரும்புகிறார் என்பதையே அவரது பதில் காட்டுகிறது.