மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கேரளாவில் அரசு முன்னெடுக்கும், "பெண்கள் சுவர்" நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதாக அறிவித்த சில மணி நேரங்களில், அந்த அறிவிப்பை, மலையாள நடிகை மஞ்சு வாரியர் வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
சபரிமலை விவகாரத்தில், மக்களிடம் ஆதரவு திரட்ட, வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு, பெண்களை வரிசையாக நிறுத்தி, "பெண்கள் சுவர்" அமைக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இந்த "பெண்கள் சுவர்" நிகழ்வில், பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் சில மணி நேரங்களில், தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றிருக்கிறார். அரசியல் கலப்புள்ள நிகழ்வாக முன்னெடுக்கப்படுவதால், அதில் பங்கேற்க தாம் விரும்பவில்லை என்றும் மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.