ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் வேதா, ஸ்கெட்ச் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி. சமூக, மற்றும் அரசியல் விஷயங்களில் அவ்வப்போது துணிச்சலாக, அதேசமயம் நையாண்டியுடன் கருத்து சொல்வதிலும் வல்லவர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து கேரளாவில் ஒரு கட்சியினர் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
இதை குறிப்பிட்டு பேசியுள்ள நடிகர் ஹரீஷ் பெராடி, “இந்த பந்த்தினால் எதிர்பாராமல் பயண வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் மாட்டிக்கொண்டவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். வழக்கம்போல பந்த் அன்று பால் மற்றும் செய்தித்தாள்கள் விநியோகம் பாதிக்கப்படாது. அதனால் முதலில் பாலை வாங்கி, கிடைக்கும் ஏதாவது ஒரு செய்தித்தாளை அதில் தொட்டு சாப்பிடுங்கள்.. பசி ஆறிவிடும்” என கிண்டலாக கருத்து கூறியுள்ளார்.