600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நாயகனாக நடித்தவர் துல்கர்சல்மான். இந்த படம் தெலுங்கில் ஓகே பெங்காரம் என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான மகாநதி படத்தில் ஜெமினி கணேசனாக நடித்தார் துல்கர் சல்மான். இதனால் தற்போது அவர் தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமான நடிகராகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் தில்ராஜூ தயாரிக்கும் ஒரு இரண்டு ஹீரோ கதையில் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோ வேடத்தில் நடிக்க துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் அவர் மலையாளம், ஹிந்தி படங்களில் பிசியாக இருப்பதால் துல்கர் சல்மானுக்காக காத்திருக்கிறார் நானி.