தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் திலீப் நடித்த ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானவர் அருண்கோபி. முதல்படத்தையே 100 கோடி வசூல் கிளப்பில் இணைத்த அருண்கோபிக்கு பரிசாக தனது மகன் பிரணவ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தார் மோகன்லால்.
இருபத்தியொன்னாம் நூற்றாண்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்தப்படத்தையும் தற்போது இயக்கி முடித்துவிட்ட அருண்கோபிக்கு அடுத்து மிகப்பெரிய ஜாக்பாட்டாக மோகன்லால் படத்தையே இயக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை தயாரித்த தோமிச்சான் முலகுபாடம் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவரே வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, பிரணவ்-அருண்கோபி கூட்டணியில் உருவாகியுள்ள இருபத்தியொன்னாம் நூற்றாண்டு படத்தையும் இவர்தான் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.