ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழில் சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சல், இருவர் உள்ளம் படங்களில் நடித்து வருகிறவர் பாயல் ராஜ்பரத். இவர் பஞ்சாபி நடிகை, தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 என்ற படத்தில் நடித்துள்ளார். பல பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். தன்னை இயக்குனர் ஒருவர் பாலியல் உறவுக்கு அழைத்ததாக பாயல் பகீர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான் நடித்த தெலுங்கு படம் ஆர்எக்ஸ் 100 வெற்றிபெற்றதால் தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்தது. சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னிடம் கால்ஷீட் கேட்டார். என்னிடம் கதை சொல்லுங்கள் பிடித்திருந்தால் கால்ஷீட் தருகிறேன் என்றேன். அவர் என் வீட்டுக்கு வந்திருந்தார். என்னிடம் கதை சொன்னார். கடைசியாக "இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால் சிலரை அவர்களுக்கு பிடித்த மாதிரி திருப்திப் படுத்த வேண்டும்" என்றார். என்னை படுக்கைக்கு அழைக்கிறீர்களா? என்று அவரிடம் சத்தம்போட்டு வீட்டை விட்டு துரத்தினேன்.
நடிகை என்றால் எந்த தயக்கமும் இன்றி படுக்கைக்கு அழைக்கலாம் என்று நினைக்கிறார்கள். நான் நடிகைதான் ஆனால் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவள். திரையுலகில் நடிகைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வை மாற வேண்டும். இவ்வாறு பாயல் கூறியுள்ளார்.