பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
குறுகிய காலத்திலேயே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு தனியிடத்தை பிடித்தவர் தெலுங்கு இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா. அனைவரிடமும் வயது வித்தியாசம் பார்க்காமல் கலகலப்பாக பழகும் இவரது சுபாவமே இவர் நடித்து சமீபத்தில் வெளியான டாக்ஸிவாலா படக்குழுவினரை சங்கடப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
'டாக்ஸிவாலா' படம் ஹிட்டானதை தொடர்ந்து உடனடியாக சக்சஸ் மீட் நடத்தினார்கள் அதன் படக்குழுவினர். இந்த நிகழ்வில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் கலந்து கொண்டார். அனைவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது விஜய் தேவரகொண்டா தனது அருகில் நின்ற அல்லு அரவிந்த்தின் தோள்மீது கையை போட்டபடி போஸ் கொடுத்தார்.
அவ்வளவு பெரிய சீனியர், அவரது வயதுக்கான மரியாதை கூட தராமல் விஜய் தேவரகொண்டா இப்படி அவர் தோள்மீது கை போடலாமா என படக்குழுவினர் அப்செட் ஆனார்களாம். இதுகுறித்து சிலர் வெளிப்படையாகவே விஜய் தேவரகொண்டாவிடம் கூறவும் செய்தார்களாம். ஆனால் அவரோ, “அல்லு அரவிந்த் சார் எனக்கு தந்தை போன்றவர். அந்த பாசத்தின் உரிமையில் தான் நான் அவர் தோளில் கை போட்டேன். இது ஏதேச்சையாக நடந்த ஒன்று” என அவர்களை சமாதானப்படுத்தினாராம்.