'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
பிரபல மலையாள நடிகர் திலீப். முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட, பின்னர் ஜாமினில் விடுதலை ஆனார். வழக்கு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் நடக்கும் தனது படத்தின் படப்பிடிப்பில் வருகிற டிசம்பர் 16ந் தேதி முதல் 31ந் தேதி வரை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அதற்கு வசதியாக தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இதற்கு அரசு தரப்பு வக்கில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பணபலம் படைத்த திலீப், சாட்சிகளை கலைத்து விடுவார் அதற்காக அவர் வெளிநாடு செல்லக்கூடும் என்றார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், திலீப்பின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டது. வெளிநாட்டு சுற்றுப் பயண முழு விபரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய திலீப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அவர் தனது பயணத்திட்டத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை ஆய்வு செய்த நீதிமன்றம், திலீப் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஏற்கெனவே இதேப்போன்று துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு கோர்ட் அனுமதியுடன் சென்ற திலீப், திட்டமிட்டபடி திரும்பியதையும், பாஸ்போர்ட்டை மீண்டும் ஒப்படைத்ததையும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.