ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் திலீப். கடத்தல் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஒன்று ஜெர்மனியில் வருகிற டிசம்பர் 15ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடக்கிறது. அதற்கு வெளிநாடு செல்ல வசதியாக தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க போலீசுக்கு உத்தர விடவேண்டும் என்று திலீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். "வழக்கை தாமதம் செய்யும் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்வது சாட்சிகளை கலைப்பதற்காக இருக்கலாம்" என்றார்.
இதற்கு திலீப்பின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுவரை கோர்ட் விதித்த எந்த நிபந்தனையையும் திலீப் மீறவில்லை. போலீஸ் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகன் அவர். கோடி கணக்கில் அரசுக்கு வருமானவரி செலுத்துகிறார்" என்று வாதிட்டார்.