ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் மலையாளத்தில் த்ரிஷ்யம் என்கிற ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, அதை தமிழில் கமலை வைத்து பாபநாசம் என்கிற பெயரில் ரீமேக்கும் செய்து அதையும் பேசவைத்தார். சமீபத்தில் இந்தப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்ட ஜீத்து ஜோசப், இந்தக்கதையில் தமிழில் ஆரம்பத்தில் ரஜினி தான் நடிக்க விரும்பியதாக கூறினார்.
ஆனால் ரஜினியை சந்தித்து இந்த கதை பற்றி விவாதித்தபோது, படத்தின் இரண்டு காட்சிகளில் சாதாரண கான்ஸ்டபளிடம் ரஜினி அடிவாங்குவது போன்று காட்சி வைத்தால், ரஜினியே நடிக்க ஒப்புக்கொண்டாலும் கூட அதை அவரது ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்கிற விஷயம் இந்தப்படத்திற்கு குறுக்கே நின்றது.
மலையாளத்தில் மோகன்லால் ஒப்புக்கொண்டு நடித்த விஷயத்தை, அவரது ரசிகர்களும் ஏற்றுக்கொண்டதால் தான் அந்தப்படம் வெற்றியடைந்தது என கூறியுள்ள ஜீத்து ஜோசப், ஒரு நடிகரின் சூப்பர் ஹீரோ இமேஜ் என்பது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய சில நல்ல படங்களையும் நல்ல கேரக்டர்களையும் அவர்களிடம் நெருங்கவிடாமல் செய்துவிடுகிறது என கூறியுள்ளார்.