ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்தவருடம் கேரளாவில் நடந்த மலையாள நடிகை கடத்தல் சம்பவத்தில் குற்றவாளி ஆக்கப்பட்டது நடிகர் திலீப் தான் என்றாலும், இப்போது பெண்ணியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நடிகைகள் மோகன்லாலின் தலையையே அதிகம் உருட்டுகிறார்கள். ஆம்.. நடிகர்சங்க தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார் என்பதற்காகத்தான்.
பெண்கள் நல அமைப்பின் பலவித போராட்டங்களுக்கு பிறகு, தற்போது திலீப்பை சங்கத்திலிருந்து ராஜினமா செய்ய வைத்த மோகன்லால் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, “எல்லா விஷயங்களிலும் என் பெயரை முன்னிறுத்தி இந்த விஷயம் பேசப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் கூட என் பெயரை முன்னிறுத்திதான் இந்த செய்தியை ஒளிபரப்புகிறார்கள்.
இதை நான் துளியும் விரும்பவில்லை. நடிகர் சங்க தலைவராக நான் இப்போது திருப்தியாக இல்லை. நான் எதற்கு அப்படி என் பெயரையும் கெடுத்துக்கொண்டு சங்க தலைவராக இருக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், தலைவர் பதவியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை” என தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.