டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார் என்கிற காரணத்திற்காக மலையாள நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கவேண்டும் என சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்தை கடுமையாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, நடிகர் சங்கத்திற்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் ராஜினமா செய்துவிட்டார் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேச தன்னை வந்து சந்திக்குமாறு திலீப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தன்னை வந்து சந்தித்தபோது திலீப்பிடம் ராஜினமா செய்யும்படி தான் வலியுறுத்தியதாகவும், திலீப்பும் எந்த மறுபேச்சும் இல்லாமல் ராஜினமா கடிதம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார் மோகன்லால்.
திலீப் அவராகவே ராஜினமா செய்ததாக நடிகர் சித்திக் கூறியிருந்தாரே என நிருபர்கள் மோகன்லாலிடம் கேள்வி எழுப்ப, “நான் என்ன செய்தேனோ அதைத்தான் நான் சொல்கிறேன். நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள்.. இல்லை உங்களுக்கு எது நம்பிக்கையாக தெரிகிறதோ அதையே நம்புங்கள்” என கோபமாக கூறினாராம் மோகன்லால்.