பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமா பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் டார்ச்சர்களை 'மீ டூ' என்கிற பிரச்சாரம் மூலமாக சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் மலையாள நடிகை ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல், மலையாள குணசித்திர நடிகரான 55 வயதான அலாசன்சியர் லே என்பவர் தனக்கு கொடுத்த பாலியல் சித்தரவதைகள் குறித்து வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட நடிகை தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ளார். அவர் பெயர் திவ்யா கோபிநாத்.. ஆபாசம் என்கிற படத்தில் நடித்தபோதுதான் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை அவர் சந்தித்துள்ளார்.
தற்போது படம் வெளியாகியுள்ள நிலையில் அந்தப்படத்தின் இயக்குனர் ஜபித் நம்ரதத் என்பவரும், நடிகர் அலான்சியர் லேயை விளாசியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அலான்சியரை சமாளிக்கவும், கண்காணிக்கவுமே ஒரு உதவி இயக்குனரை தனியாக ஒதுக்கியிருந்தாராம். நிறையமுறை உதவி இயக்குனர்களின் சாமர்த்தியத்தால் தான், திவ்யா, அலான்சியரின் தொல்லைகளில் இருந்து தப்பித்துள்ளார் எனவும் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர்.