ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரையுலகில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் குறிப்பாக நடிகைகள் 'Me too' என்கிற சோஷியல் மீடியா பிரச்சாரம் மூலமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு, துன்புறுத்தல்களை வெளிபடுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தான் யாரென்பதை குறிப்பிட விரும்பாத இளம் மலையாள நடிகை ஒருவர், மலையாள குணசித்திர நடிகரான அலான்சியர் லே லோபஸ் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் எழுதியுள்ளதாவது, “நான் எனது நான்காவது படத்தில் நடித்தபோது, அந்தப்படத்தில் தான் முதன்முதலாக அலான்சியருடன் நடித்தேன்.. அதுவரை வெளியில் இருந்தும், சினிமா திரையிலும் அவரை ஜென்டில்மேனாக பார்த்து வந்த எனக்கு இந்த படப்பிடிப்பு பல அதிர்ச்சிகளை தந்தது.
அவர் என் பக்கத்தில் அமரும் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு, ஒரு முன்னணி நடிகர் பெண்களை எப்படி கட்டிப்பிடிப்பார் தெரியுமா என கேட்டு என்னை கட்டிப்பிடித்து தொடக்கூடாத இடத்தில் அத்து மீற முயன்றார். எப்போதும் பெண்களின் உடல் அமைப்பை பற்றியே பேச முயற்சிப்பார். ஒரு மீனை உண்ணும்போது கூட, அதன் பாகங்களை பெண்களுடன் ஒப்பிட்டு பேசுவார்.
இவர் டேஞ்சரான ஆள் என்பதை உணர்ந்த நான் பல நேரங்களில் அவரது பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி ஒவ்வொரு முறையும் தெய்வாதீனமாக தப்பினேன். இதுதான் அவருடன் எனது முதலும் கடைசியுமான படம். மிக கொடூரமான அனுபவம் அந்த நாட்கள்” என ஒரு மிக நீண்ட கடிதம் மூலமாக அலான்சியர் தன்னிடம் எப்படியெல்லாம் அத்துமீற முயன்றார் என குறிப்பிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்களுக்கு முன் பஹத் பாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமான இவர் பிரமாதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். மோகன்லால், மம்முட்டி படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருபவர். 53 வயதான இவர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.