'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்குப்பின் அவரது மகள் ஸ்ரீமயிக்கு, அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் ஆதரவாக இருந்து வருகிறார்கள்..
இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார். அதன்பின் ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் மேற்கொண்டு அந்தப்படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்தநிலையில் கல்பனாவின் மகள் ஸ்ரீமயி, தான் 'மோலிக்குட்டியின் சுயம்வரம்' என்கிற புதிய படம் ஒன்றில் அறிமுகமாகி நடித்து வருவதாகவும், அந்தப்படத்தை பஷிலி கபீர் என்பவர் இயக்குவதாகவும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் தனது தாய்க்கு தந்த ஆதரவை தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீமயி.